செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நீ வருவாய் என..


அறையில்
முடங்கிக் கிடக்கிறது
இந்தப் பகல்.

நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.

முதலில்
பேப்பர்காரன் வந்தான்
அப்புறம்
தபால் காரன்.

இன்னும்
சோப்பு விற்பவன்
பீனாயில் விற்பவன்
டெட்டால் விற்பவன்
வரக்கூடும்.

அலைபேசி
அதிசயமாய்
உறங்கிக்கிடக்கிறது.

சாரலாய் தொடங்கி
பேயாய் மாறிப்போன
மழை போலிருந்தது
உனது காமம்.

நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.

நீ
வரலாம் - அல்லது
இந்நேரம்
வேறு யாருக்கேனும்
புதிதாய்
எஸ்எம்எஸ்களை
விட்டுக் கொண்டிருக்கலாம்
.