நடந்து முடிந்த தமிழகப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா.. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேலை நியமண தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு பல ஆயிரம் பேர் மீண்டும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னை நகர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வெளி நாட்டு உதவியுடன் பல்வேறு தொழிற்சாலைகள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம். 108 ஆம்புலன்ஸ் சேவை என எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அந்த அரசு செய்தது.
ஆனாலும் வீழ்ச்சி. ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போல இலவசங்களைக் கொடுத்து விட்டு இமாலய ஊழல்கள் செய்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர். சுனாமி போல் சுழன்றடித்த மின் வெட்டால் தமிழகம் இருண்ட போது உருப்படியாய் எதுவும் செய்வில்லை. குடும்ப உறுப்பினர்களின் கோரத் தாண்டவம், எல்லாத் துறையிலும் ஆதிக்கம் என மக்களுக்கு கொடுத்த இன்னல்கள், மக்கள் நலப்பணிகளை எல்லாம் விழுங்கி்க் கொண்டது. இடைத் தேர்தல்களில் வாக்காளர்களை விலைக்கு வாங்கி செயற்கையான வெற்றி பெற்று மக்களின் உண்மையான மனநிலைய நிலையை புறம் தள்ளினர். அல்லது கவனிக்க மறந்தனர்.
தமிழகத்தில் திராவிட இனத்தின் அரணாக ஒடுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்றும், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்த இயக்கம் ஒருகட்டத்தில் அதிலிருந்து சறுக்கியது பெரும் சோகம். திமுக ஜாதி அரசியலுக்குள் சிக்கியதும், திமுகவின் பெரும் தலைகள் ஜாதியத்தின் ஆதரவாளர்களாய் ஆதிக்க சக்திகள் போல் வலம் வந்ததும். திமுக தலைமையின் அங்கத்தினர்கள் பகுத்தறிவு சிந்தனைக்கு எதிரானப் போக்குகளைக் கொண்டதும், அந்த இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்ற கேள்வி நோக்கி மக்களை குறிப்பாக இன உணர்வாளர்களை சிந்திக்க வைத்தது. திமுகவின் மாறிய சிந்தனைப் போக்கு மக்களுக்கு இலவசமாய் எதையாவது வீசி அவர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு ஆடம்பரமாக அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமென்பதாகத் தான் இருந்தது.
ஆனால் மக்கள் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டு காத்திருந்தனர். மக்களுக்குத் தான் எத்தனைக் கோபம். நியாயமாக நடைபெற்ற ஓர் தேர்தலில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். யார் வந்தாலும் கவலையில்லை.. திமுக அல்லது திமுக கூட்டணி வரக்கூடாது என்ற முடிவை எழுதி விட்டனர்.
அதனால் தான் அதிமுக அரியணை ஏறிவிட்டது. அதிமுகவும் இந்த மக்கள் புரட்சியை மனதில் கொள்வது நல்லது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனது ஊர். நானொரு சமூக ஆர்வமுள்ள பத்திரிகையாளன். மனித நேயமும் மரம் நடுதலும் எனக்குப் பிடித்தவை. வாசிப்பதும், எழுதுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது. எனது வழிகளில் நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். அழகியப் பூக்கள் பூக்கின்றன.
திங்கள், 23 மே, 2011
வெள்ளி, 6 மே, 2011
வல்லரசு
அவர்களிடம்
அரிவாள் இருக்கின்றது
கத்தி இருக்கின்றது
கடப்பாரை இருக்கின்றது
ஏன்...
அணு குண்டுகள் கூட இருக்கின்றதாம்.
நெருங்க முடியாதாம்
வல்லரசாம்.
அங்கே
வறுமைப் பானைகளில் தான்
பட்டினியை சமைக்கின்றார்களாம்.
இரட்டைத் டம்ளர்களின் தான்
ஜாதிகளை ஆற வைக்கின்றார்களாம்.
பாப்பா பட்டிகள்
ஜனநாயகத்தின் உதாரணங்களாம்.
ரத்ததானம்
மனிதனுக்கும் மண்ணுக்கும் தானாம்.
அதற்கு
மதங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாம்.
அவர்களிடம்
அணு குண்டுகள் கூட
இருக்கின்றதாம்..
நெருங்க முடியாதாம்
வல்லரசாம்...
அரிவாள் இருக்கின்றது
கத்தி இருக்கின்றது
கடப்பாரை இருக்கின்றது
ஏன்...
அணு குண்டுகள் கூட இருக்கின்றதாம்.
நெருங்க முடியாதாம்
வல்லரசாம்.
அங்கே
வறுமைப் பானைகளில் தான்
பட்டினியை சமைக்கின்றார்களாம்.
இரட்டைத் டம்ளர்களின் தான்
ஜாதிகளை ஆற வைக்கின்றார்களாம்.
பாப்பா பட்டிகள்
ஜனநாயகத்தின் உதாரணங்களாம்.
ரத்ததானம்
மனிதனுக்கும் மண்ணுக்கும் தானாம்.
அதற்கு
மதங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாம்.
அவர்களிடம்
அணு குண்டுகள் கூட
இருக்கின்றதாம்..
நெருங்க முடியாதாம்
வல்லரசாம்...
வியாழன், 5 மே, 2011
வெள்ளி, 29 ஏப்ரல், 2011
வெட்கப்பட வேண்டாம்..

இன்னும் பெரிய கோப்பைகளை
வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள்
பெருத்த வயிறுகளுக்கு
இதைவிட பெரிய கோப்பைகள் வேண்டுமென்று
நாம்
உணர்ந்துள்ளோம்.
செந்நிற திரவமோ
கருநிற திரவமோ
உங்கள் கோப்பைகளில்
எப்போதும்
நிரம்பி வழிந்து கொண்டேயிருக்கட்டும்.
நீங்கள்
இன்பம் என கருதுவதைத் தானே
நாம்
தரவேண்டும் ?
உங்களில் பலர்
வெட்கத்துடனும்
புன் முறுவலுடனும்
புட்டிகளுக்காக
வரிசையில் நிற்பதை
நாம்
கண்டு வருகிறோம்..
வெட்கப்பட வேண்டாம்
எனெனில்
நாமே
வெட்கப்படுவதில்லை...
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
சுற்றுச் சூழல்
தமிழகத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன ?
கன்னியாகுமரி மாவட்டம் களியல் சந்திப்பில் ஒரு சகோதரர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். ஆரம்ப கல்வி மட்டுமே கற்ற அவருக்கு, சுற்றுச் சூழல் குறித்து இருக்கும் கவலை, நம்மில் பலருக்கு இல்லை. அந்த சகோதரர் காங்கீரீட் கட்டுமானங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது குறித்து பல் வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கும் அரசுக்கும் தொடர் கடிதங்கள் எழுதி வருகிறார். ஆனால் அவரது கடிதங்களுக்கு எந்த நடவடிக்கைகளும் இல்லை.
இந்தியாவில் சுனாமிக்கு பிறகு சுற்றுச் சூழல் குறித்த அக்கறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அதனை முழுமையாக உணர்ந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் தற்போது அனைத்தையும் விற்று காசாக்குவது என்ற நோய் வேகமாக பரவிவருகின்றது. இதில் ரீயல் எஸ்டேட் தொடங்கி பாறைகள், குன்றுகள் என எல்லாவற்றையும் உடைத்து விற்று தங்கள் கஜானாவை நிரம்பி விட வேண்டுமென்று அரசியல் பிரமுகர்கள், அல்லது அவர்களது பினாமிகள் துடித்துக் கொண்டிருகின்றனர்.
இதில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுக்கும் வித்தியாசமில்லை.
இதன் ஒரு பகுதியாகத் தான் இயற்கை வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இயற்கை அரணாக திகழும் பாறைகள் மற்றும் குன்றுகளை உடைப்பதும், தினம் நூற்றுக்காணக்கான லாரிகள் மணல் மற்றும் பாறைத் துகள் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு செல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தை விட கேரளாவில் அதிக அளவு பாறைகளும், குன்றுகளும் உள்ள நிலையில் தமிழகத்திலுள்ள பாறைகளை உடைத்து கேரளாவிற்கு கொண்டு செல்ல என்ன அவசியம் வந்தது என்ற கேள்வி ஒவ்வொரு சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் மனதில் எழும்பும் நியாயமான கேள்வியாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைக் கிராமமான களியல் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த கல்குவாரி நிறுவனம் ஒன்று பாறைகளை உடைத்து அதன் துகளை தண்ணீரில் கழுவி எம்-சான்ட் என்று செயற்கை மணலாக மாற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கிறது. இதற்காக இங்குள்ள கோதையாற்றிலிருந்து தினம் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுத்துத் வருகின்றது. இதற்காக விதிகளை மீறி மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. இதனை தடுக்க பொதுப்பணித் துறை முன்வரவில்லை. 50
டன் சுமையோடு மணல் அல்லது பாறைத் துகள் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும், அதனால் பிற வாகனங்களில் பயணிப்போருக்கு நேர விரயமும், பிற வாகனங்களுக்கு கூடுதல் எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இது தவிர அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால் குமரி மாவட்டதில் தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்துச் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் அழகான சாலை என்றால் அது ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையாகத் தான் இருக்கும். பரந்து விரிந்து கிடக்கும் சிற்றாறு அணையின் கரைப் பகுதி வழியாக இருபுறமும் பூத்துக் குலுங்கி நிற்கும் கொன்றை மரங்களுக்கு மத்தியில் செல்லும் சாலை இயற்கை பிரியர்களை, இறக்கை கட்டி பறக்க வைக்கும் அழகு கொண்டது. ஆனால் அந்த சாலை இப்போது கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறிய சாலை போல் காட்சியளிக்கின்றது.
இத்தகைய சேதங்களையும், இழப்புகளையும் கணக்கிட்டால் அரசுக்கு மணல், அல்லது பாறைத் துகள் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் கொசுறு தான். குத்தகை தாரர்களுக்கும் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் கொள்ளை லாபம்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் தமிகத்தில் பாறைகள், குன்றுகள் எதிர்காலத்தில் இருக்குமா... நமது சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுமா... அனைத்தையும் விற்று காசாக்குவது தொடருமா... தமிழத்தின் குன்றுகளை உடைத்து கேரளாவிற்கு அனுப்புவதற்கான அவசியம் என்ன.. கேள்விகள் ஏராளம்.
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
ரோபோக்கள் போதும்
தன்னைத் தானே
வெட்டிக் கொண்டு
செத்துப் போனான் பா.கி.
கணினியிலிருந்து வெளியேறிய
கனலில்
கருகிப் போனார்கள்
தினக் கவர்ச்சிப் பத்திரிகை
ஊழியர்கள்
நாளை
நட்டு வைத்திருந்த
சூலாயுதத்தில் விழுந்து
செத்துப் போகக் கூடும்
ராம சங்கரன்
நீதி மன்றங்களுக்கு
சாட்சி முக்கியம்
மனசாட்சி ?
இனி
தீர்ப்புகளை
ரோபோக்கள் சொல்லும்..
வெட்டிக் கொண்டு
செத்துப் போனான் பா.கி.
கணினியிலிருந்து வெளியேறிய
கனலில்
கருகிப் போனார்கள்
தினக் கவர்ச்சிப் பத்திரிகை
ஊழியர்கள்
நாளை
நட்டு வைத்திருந்த
சூலாயுதத்தில் விழுந்து
செத்துப் போகக் கூடும்
ராம சங்கரன்
நீதி மன்றங்களுக்கு
சாட்சி முக்கியம்
மனசாட்சி ?
இனி
தீர்ப்புகளை
ரோபோக்கள் சொல்லும்..
சனி, 29 ஜனவரி, 2011
மாத்தூர் தொட்டிப் பாலம்
மாத்தூர் தொட்டிப்பாலம்
மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவின் அதிசயம், சுற்றுலாப் பயணிகளை தாலாட்டும் தொட்டில், அதன் மேல் பகுதியில் மெல்லியதாய் வீசும் காற்றுக்கிடையில் நின்று கொண்டு பச்சைப் பசேலென விரிந்து கிடைக்கும் இயற்கை வனப்புகளை ரசிப்பது அலாதியானது.
எத்தனை உயரம்... எத்தனை பிரம்மாண்டம்... ஆற்று வெள்ளத்திற்கு மத்தியில் இத்தனை உயரத்திற்கு அந்த வசதியில்லாத காலத்தில் எப்படி எழுப்பினார்கள் இந்த அதிசயத்தை என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆம். 1969 ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதி பாசனத்திற்கு சிற்றாறு அணையைக் கட்டி, அதற்கான கால்வாயை வெட்டும் போது இப்படி ஒரு இக்கட்டில் சிக்கி விட்டோமே என்று பொறியாளர்கள் எண்ணியிருக்கக் கூடும். அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாத்தூரில் குறுக்காக 100 அடி ஆழத்தில் பாய்ந்து செல்லும் பரளியாற்றைக் கடந்து எப்படி கொண்டு செல்வது ? உண்மையில் சவாலான பணி தான். சாதித்திருக்கிறார்கள் நமது பொறியாளர்கள்.
1240 அடி நீளம், 101 அடி உயரம், 29 தூண்கள் என பிரமாண்டமாய் நிற்கிறது தொட்டிப்பாலம். ஒரு பக்கம் கால்வாய், அதற்கு இணையாக மக்கள் நடந்து செல்ல நடைபாதை.
தமிழக சுற்றுலாத் துறையும், குமரி மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் பஞ்சாயத்துகளான அருவிக்கரை, வேர்க்கிளம்பி நிர்வாகங்களும் இங்கு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் பல வசதிகளை செய்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இப்பகுதியில் உற்பத்தியாகும் அன்னாசிப் பழங்களும், வருக்கை பலாப்பழங்களும் கிடைக்கும்.
வாருங்கள்.. இயற்கை இங்கு உங்களுக்காக தொட்டில் கட்டி காத்திருக்கின்றது. இது உங்கள் இதயத்தை கொள்ளைக் கொள்ளும் இடம்.
நாகர்கோவிலிலிருந்து தக்கலை அழகியமண்டபம் திருவட்டார் மாத்தூர் வழியாக இந்த பாலத்திற்கு செல்லாம். திருவட்டாரிலிருந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு 3 கி.மீட்டர் தூரம்.
வியாழன், 9 டிசம்பர், 2010
மறுபடியும் மறக்க முடியாத நாள்...
டிசம்பர் 7 ம் தேதி நண்பகல், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பலத்த மழையில் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
சன் டிவி ஜெரால்டிடமிருந்து போன் வந்தது. "லாசர், பேச்சிப்பாறையிலிருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தெறந்து விட்டிருக்காங்களாம்". எனது மனதிற்குள்ளும் அந்த எண்ணம் ஏற்பட்டிருந்தது. மழை மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் தினமலர் நண்பர் ஜெயமோகன் திருநந்திக்கரை கோயிலில் வெள்ளம் புகுந்து விட்டதாக போனில் சொன்னார். "உடனடியாக புறப்பட்டு வாருங்கள் இருவரும் அங்கு செல்லலாம்" என்றேன்.
சற்று நேரத்தில் அவரும் வந்துவிட்டார். இருவருமாக திருநந்திக்கரை விரைந்தோம்.
செல்லும் வழியில் திட்ட விளை கிராமம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தை பார்த்தபோது நிலமையை முழுமையாக உணர்ந்து கொண்டோம்.
ஏறக்குறைய இருள் சூழ்ந்து விட்டிருந்தது. நந்தியாறு நிரம்பி நந்தீஸ்வரர் கோயிலுக்குள் வெள்ளம் வேகமாக புகுந்து கொண்டிருந்தது. கோயில் வெள்ளத்தில் மிதந்தது போலவே காணப்பட்டது. அந்த நேரத்திலும் கோயிலில் அர்ச்சகர் பூசை நடத்திக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவரை வெளியே அழைத்து வந்தார்கள்.
பின்னர் ஒருவழியாக புகைப்பட காரரை அழைத்து படம் எடுத்தோம். பின்னர் அவசர அவரசமாக வீடு வந்து அடுத்த நாள் செய்திக்கு படத்துடன் அதனை கணினியின் தட்டிவிட்டேன்.
மழை தொடர்ந்து தீவிரமானது. சற்று நேரத்தில் பேச்சிப்பாறை அருகில் வசிக்கும் அண்ணன் சேவியர் வீட்டிலிருந்து போன் வந்தது. வெள்ளம் வீட்டின் முற்றம் வரை வந்து விட்டதாக சொன்னார். எனது மனக்கண் முன்னால் 1992 நவம்பர் 13 தான் ஓடிக்கொண்டிருந்தது. விமலாவிடமும் அதனை விவரிதேன். நண்பர்கள் ஜெயமோகன், கமலன், பிரதீஸ் ஆகியோரிடமிருந்து தொடர்ந்து போன் வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் ஜெரால்டிடமிருந்து அழைப்பு, கலெக்டர் ராஜேந்திர ரத்னூ திருவட்டாரில் முகாம் என்றார்.
இரவு தூக்கம் வரவில்லை. அதிகாலை 3 மணிக்கு நண்பர் மைக்கேல் ராஜிடமிருந்து அழைப்பு, லாசர் மழை நிற்கவில்லை. பலத்த இடி வெட்டும் உள்ளது என்றார்.
காலையில் எழுந்து முதல் வேலையாக மழைக் கோட்டை அணிந்து கொண்டு திற்பரப்பு அருவிக்கு விரைந்தேன். நிலைமையின் தீவிரம் மேலும் உறைத்தது. அப்புறம் களியல், பின் தொடர்ச்சியாக திருவட்டார், தேமானூர், மூவாற்றுமுகம், பின்னர் பேச்சிப்பாறை என கொட்டும் மழையில் ஒரே ஓட்டம் தான். எங்கும் வெள்ளத்தின் ருத்ர தாண்டவம். இடையில் மோட்டார் சைக்கிள் வேறு பல இடங்களில் மக்கர் செய்தது. ஒரு வழியாக சம்வங்களை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்து கணினி முன் அமர்ந்தேன்.....
மறக்க முடியாத நாள்கள்... . ஆம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளது. 1992 நவம்பர் 13 க்கு பிறகு 2010 டிசம்பர் 7, 8 தேதிகளில்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மறுகால் வெள்ளமும், இதர பகுதிகளிலிருந்து புறப்பட்டு வந்த வெள்ளமும் ஆற்றில் பிரவாகம் எடுத்து ஓடியது.
உண்மையில் 1992 ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு இப்போது இல்லை. ஊடகங்கள் வழியாகவும், இதர தகவல் தொடர்பு கருவிகள் வழியாகவும் கிடைத்த தகவல்கள் மக்களை முன்னெச்சரிக்கையாக வைத்து விட்டன. எனினும் ஆறுகளின் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை இந்த வெள்ளம் பாதித்து விட்டது. அவர்களின் உடமைகளை வெள்ளம் களவாடி விட்டது. அது போல் நெல் வயல்களையும் மழை வெள்ளம் பதம் பார்தது விட்டது.
ஆற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்படும் போதும், தண்ணீர் பாய்ந்து செல்லும் தடங்கள் தடுக்கப்படும் போதும் அரசு அதிகாரிகள் வேடி்க்கை பார்ப்பதைத் தவிர வெறென்ன செய்வார்கள் ?.
மறுபடியும் வெள்ளம் நமக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மறுகால் வெள்ளமும், இதர பகுதிகளிலிருந்து புறப்பட்டு வந்த வெள்ளமும் ஆற்றில் பிரவாகம் எடுத்து ஓடியது.
உண்மையில் 1992 ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு இப்போது இல்லை. ஊடகங்கள் வழியாகவும், இதர தகவல் தொடர்பு கருவிகள் வழியாகவும் கிடைத்த தகவல்கள் மக்களை முன்னெச்சரிக்கையாக வைத்து விட்டன. எனினும் ஆறுகளின் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை இந்த வெள்ளம் பாதித்து விட்டது. அவர்களின் உடமைகளை வெள்ளம் களவாடி விட்டது. அது போல் நெல் வயல்களையும் மழை வெள்ளம் பதம் பார்தது விட்டது.
ஆற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்படும் போதும், தண்ணீர் பாய்ந்து செல்லும் தடங்கள் தடுக்கப்படும் போதும் அரசு அதிகாரிகள் வேடி்க்கை பார்ப்பதைத் தவிர வெறென்ன செய்வார்கள் ?.
மறுபடியும் வெள்ளம் நமக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
நீ வருவாய் என..

அறையில்
முடங்கிக் கிடக்கிறது
இந்தப் பகல்.
முடங்கிக் கிடக்கிறது
இந்தப் பகல்.
நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.
முதலில்
பேப்பர்காரன் வந்தான்
அப்புறம்
தபால் காரன்.
இன்னும்
சோப்பு விற்பவன்
பீனாயில் விற்பவன்
டெட்டால் விற்பவன்
வரக்கூடும்.
அலைபேசி
அதிசயமாய்
உறங்கிக்கிடக்கிறது.
சாரலாய் தொடங்கி
பேயாய் மாறிப்போன
மழை போலிருந்தது
உனது காமம்.
நீ
தட்டும் தருணத்திற்காக
காத்திருக்கிறது
கதவு.
நீ
வரலாம் - அல்லது
இந்நேரம்
வேறு யாருக்கேனும்
புதிதாய்
எஸ்எம்எஸ்களை
விட்டுக் கொண்டிருக்கலாம்.
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
திற்பரப்பு அருவி

திகட்ட திகட்ட
குளிக்கலாம்
திற்பரப்பு அருவியில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது திற்பரப்பு அருவி. முதன்முதலாக குலசேகரம் கான்வென்ட் பள்ளியில் 1 ம் வகுப்பு படிக்கும் போது தான் அங்கு சுற்றுலா சென்றோம். அப்போதைய பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. அருகில் பிராமாண்டமான கற்களால் எழுப்பப்பட்ட மகாதேவர் கோயிலும், கோயிலுக்கு செல்லும் நடை பாதையில் செதுக்கப்பட்டுள்ள தவளையைப் பிடிக்கத் துடிக்கும் பாம்பு சிற்பமும் ஆச்சரியமாய் இருந்தது. அதன் பிறகு பதின் பருவத்தில் மிதிவண்டியில் அவ்வப்போது அருவி சென்று குளித்து மகிழ்வதுண்டு. அப்போதெல்லாம் அந்த அருவி அரிதாரம் பூசாத அருவியாகவே இருந்தது.
இன்று ஏறக்குறைய ஒரு இந்திய அளவிலான சுற்றுலாத் தலமாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. பூங்காக்களும், சிறார் நீச்சல் குளமும், படகு துறையுமாய் அருவின் சுற்றுப்பகுதிகள் விரிவடைந்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. ஆதிகாலத்தில் இந்த ஆறு தற்போது அருவியாக விழுந்த இடத்தின் வழியாக பாயவில்லை என்பது தான் உண்மை. பிற்காலத்தில் தான் ஆற்றின் போக்கை முழுமையாக திருப்பி உயரமான அருவியாக்கியுள்ளனர். யுகங்களுக்கு முன்னர் இந்த ஆறு பாறைகளின் வழியாய பாய்ந்தோடிய தடங்களை இப்போது காணமுடியும், அவை பார்ப்போரை பரசமூட்டும் நல்ல ஓவியங்கள், அல்லது கவிதைகள் எனலாம்.
தமிழகத்தில் குற்றாலம் அருவி வறண்டாலும், திற்பரப்பு அருவி வறண்டு போவதில்லை. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். நகரத்தின் வெகு அருகில் இருபதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை எளிதில் வந்து செல்லலாம். ஆபத்து என்பது இல்லாத சுற்றுலாத் தலம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது திற்பரப்பு அருவி. முதன்முதலாக குலசேகரம் கான்வென்ட் பள்ளியில் 1 ம் வகுப்பு படிக்கும் போது தான் அங்கு சுற்றுலா சென்றோம். அப்போதைய பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. அருகில் பிராமாண்டமான கற்களால் எழுப்பப்பட்ட மகாதேவர் கோயிலும், கோயிலுக்கு செல்லும் நடை பாதையில் செதுக்கப்பட்டுள்ள தவளையைப் பிடிக்கத் துடிக்கும் பாம்பு சிற்பமும் ஆச்சரியமாய் இருந்தது. அதன் பிறகு பதின் பருவத்தில் மிதிவண்டியில் அவ்வப்போது அருவி சென்று குளித்து மகிழ்வதுண்டு. அப்போதெல்லாம் அந்த அருவி அரிதாரம் பூசாத அருவியாகவே இருந்தது.
இன்று ஏறக்குறைய ஒரு இந்திய அளவிலான சுற்றுலாத் தலமாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. பூங்காக்களும், சிறார் நீச்சல் குளமும், படகு துறையுமாய் அருவின் சுற்றுப்பகுதிகள் விரிவடைந்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. ஆதிகாலத்தில் இந்த ஆறு தற்போது அருவியாக விழுந்த இடத்தின் வழியாக பாயவில்லை என்பது தான் உண்மை. பிற்காலத்தில் தான் ஆற்றின் போக்கை முழுமையாக திருப்பி உயரமான அருவியாக்கியுள்ளனர். யுகங்களுக்கு முன்னர் இந்த ஆறு பாறைகளின் வழியாய பாய்ந்தோடிய தடங்களை இப்போது காணமுடியும், அவை பார்ப்போரை பரசமூட்டும் நல்ல ஓவியங்கள், அல்லது கவிதைகள் எனலாம்.
தமிழகத்தில் குற்றாலம் அருவி வறண்டாலும், திற்பரப்பு அருவி வறண்டு போவதில்லை. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். நகரத்தின் வெகு அருகில் இருபதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை எளிதில் வந்து செல்லலாம். ஆபத்து என்பது இல்லாத சுற்றுலாத் தலம்.
திங்கள், 24 மே, 2010
லாசர் ஜோசப் கவிதை
ஆன்லைனில் ஆடுகள் வளர்க்கலாம்
ஏ... !
எதிர்காலச் சந்ததியினரே
எதை விட்டுச் செல்வோம்
உங்களுக்காக....
அதோ
பள்ளத்தாக்குகளில் குதித்து
பேச்சியிடம் கதை பேசிவரும்
கோதை நதியையா...
அகிலும், தேக்கும்
அழகிய
சந்தனங்களும் கொண்ட
அசம்பு வனத்தையா...
மழை மேகங்கள்
தழுவிச் செல்லும்
தாடகை மலையையா...
தண்ணீருக்கு மார்பு காட்டி
படுத்துக் கிடக்கும்
திற்பரப்பு பாறைகளையா...
கன்னியும், கும்பமுமாய்
இரண்டு போகம்
விளையும்
நாஞ்சில் வயல்களையா....
ஆடுகள்
குட்டிகளோடு
துள்ளி விளையாடும்
பசும் புல் வெளிகளையா...
எதை விட்டுச் செல்வோம்
சந்ததியினரே
உங்களுக்காக...?
துகிலுரியப்பட்ட
பூமியைத் தவிர
வேறென்ன இருக்கும்
விட்டுச் செல்வதற்கு...?
சபிக்காதாதீர்
சந்ததியினரே
எங்கள் வயிறு பெரிது
பசி பெரிது
எனினும் உங்களுக்கான
கணினிகளை சேமித்து
வைத்திருக்கிறோம்
நீங்களும் தான்
ஆன்லைனில்
ஆடுகள் வளர்க்கலாம்...
ஏ... !
எதிர்காலச் சந்ததியினரே
எதை விட்டுச் செல்வோம்
உங்களுக்காக....
அதோ
பள்ளத்தாக்குகளில் குதித்து
பேச்சியிடம் கதை பேசிவரும்
கோதை நதியையா...
அகிலும், தேக்கும்
அழகிய
சந்தனங்களும் கொண்ட
அசம்பு வனத்தையா...
மழை மேகங்கள்
தழுவிச் செல்லும்
தாடகை மலையையா...
தண்ணீருக்கு மார்பு காட்டி
படுத்துக் கிடக்கும்
திற்பரப்பு பாறைகளையா...
கன்னியும், கும்பமுமாய்
இரண்டு போகம்
விளையும்
நாஞ்சில் வயல்களையா....
ஆடுகள்
குட்டிகளோடு
துள்ளி விளையாடும்
பசும் புல் வெளிகளையா...
எதை விட்டுச் செல்வோம்
சந்ததியினரே
உங்களுக்காக...?
துகிலுரியப்பட்ட
பூமியைத் தவிர
வேறென்ன இருக்கும்
விட்டுச் செல்வதற்கு...?
சபிக்காதாதீர்
சந்ததியினரே
எங்கள் வயிறு பெரிது
பசி பெரிது
எனினும் உங்களுக்கான
கணினிகளை சேமித்து
வைத்திருக்கிறோம்
நீங்களும் தான்
ஆன்லைனில்
ஆடுகள் வளர்க்கலாம்...
சனி, 20 மார்ச், 2010
குருசுமலை
சிலுவையை சுமக்கும் மலை
அந்த மலை சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது. சிலுவை என்ற சொல் குருசு என்றும் அறியப்படுகிறது. அதனால் அந்த மலை குருசு மலை என்று அழைக்கப்படுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவால் சிலுவை புனிதம் பெற்றது. அந்த சிலுவையின் அடிபணிந்து வணங்கினால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும், வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான மக்களை அதன் பாதை நோக்கி அழைத்துச் செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. பயணம் அழகிய சிற்றாறு 2 அணையின் கரைப்பகுதி வழியாக சென்றால் கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை சந்திப்பு வரும், அதிலிருந்து 2 கி.மீ. தூரம் குருசு மலை அடிவாரம்.
ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை. அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும். மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது
அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சார்பில் தவக்கால நாள்களின் இறுதிப் பகுதியில் இங்கு திருப்பயணம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குச் செல்கின்றனர்.
அந்த மலை சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது. சிலுவை என்ற சொல் குருசு என்றும் அறியப்படுகிறது. அதனால் அந்த மலை குருசு மலை என்று அழைக்கப்படுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவால் சிலுவை புனிதம் பெற்றது. அந்த சிலுவையின் அடிபணிந்து வணங்கினால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறும், வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை லட்சக்கணக்கான மக்களை அதன் பாதை நோக்கி அழைத்துச் செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. பயணம் அழகிய சிற்றாறு 2 அணையின் கரைப்பகுதி வழியாக சென்றால் கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை சந்திப்பு வரும், அதிலிருந்து 2 கி.மீ. தூரம் குருசு மலை அடிவாரம்.
ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை. அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும். மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது
அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்டம் சார்பில் தவக்கால நாள்களின் இறுதிப் பகுதியில் இங்கு திருப்பயணம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்தும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குச் செல்கின்றனர்.
சனி, 13 மார்ச், 2010
நவீன ஓவியங்கள்



எல்லைகளற்ற நவீன ஓவியங்கள்அந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு காலைப் பொழுதில் அவரது வீட்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஓவியர் வாமணனை அதற்கு முன் நான் சந்தித்திருக்கவில்லை. அவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாய் எனக்குக் காட்டினார். எனக்குள் ஏற்பட்ட பரவசம் அளவிடமுடியாதாய் இருந்தது. எத்தனை நேர்த்தி... எத்தனை நுட்பம்... அன்றைய நாளிலிருந்து அவரைக் கொண்டாடத் தொடங்கினேன்.
ஓவியர் வாமணன் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வெண்டலிகோடு கிராமத்தை சேர்ந்தவர்.
ஒரு பள்ளி ஆசிரியராய் இருந்து பணி ஓய்வுக்குப் பின் அவர் நவீன ஓவிய உலகிற்குள் வசித்து வருகிறார். நவீன ஓவியங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்ற அவரது வார்த்தைகள் நிஜமாய்த் தான் இருக்கின்றது. ஒரு பூவைச் சுற்றிச் சுற்றி வந்தமரும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் அவரது தூரிகைகளில் நவீன ஓவியங்கள் வந்தமர்ந்து கொண்டிருக்கின்றன.
அவரது ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. உயிரோட்டமான அந்த ஓவியங்கள் இறக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கின்றன.. விரைவில் அவை உலகின் கதவுகளைத் தட்டும்.
பிக்காஸோக்கள். மைக்கேலெஞ்சலோக்கள்... புதிதாய் பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
வெள்ளி, 29 ஜனவரி, 2010
கவிஞர் சந்திரகலா

கவிஞர் சந்திரகலா
சந்திரகலா நான் கொண்டாடும் கவிஞர். இலக்கியத்தில் இடம் பிடித்த அதங்கோடு அவர் பிறந்த மண். வாரமலர் இதழின் பின் பக்க அட்டைகளை அவரது கவிதைகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. என் வயதுக்கு சற்று்க குறைவாகத் தான் இருக்கும் அவரது வயது. கன்னியாகுமரி மாவட்டப் பிரஸ் கிளப் தான் முதலில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எனக்கு அளித்தது.
வசீகரிக்கும் வார்த்தைகளால் நேர்த்தியாய் கவிதை நெய்யும் வித்தை அவருகே உரியது. சந்திரகலாவின் பெயர் இல்லாமல் தமிழ் இலக்கிய உலகில் புதுக்கவிஞர்களின் பட்டியலைத் தயாரித்து விட முடியாது. அவரது கவிதைகளைப் படிக்கும்போதல்லாம் பரவசம் அடைகிறேன்.
அந்தி வானம், அலைகடல், அழகான பெண்கள், சந்திரகலாவின் கவிதை......
1990 களில் வாரமலர் இதழில் வெளிவந்த சந்திரகலாவின் ஒரு கவிதையை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து அழகு பார்த்தேன். காலம் கடந்து நிற்கும் அந்தக் கவிதையை நீங்களும் படியுங்களேன்....
தலைமை நாற்காலி
மருமகளே
இது உன்
ராஜ சபை.
புகுந்த வீடு எப்படியோ
என்கிற
புதுக்குழப்பம் வேண்டாம்
தாய் வீட்டில் அனுபவித்த
சுதந்திரக் காற்றை
நீ
இங்கேயும் சுவாசிக்கலாம்.
நான் உனக்கு
மாமியாரல்ல
மாற்றாந்தாயல்ல
இன்னொரு தாய்
இரண்டாவது தாய்.
மகளே
நானும் ஒரு நாள்
மருமகளாக இருந்தவள் தான்
என்பதை
மறந்துவிடவில்லை.
பயப்படாதே
என் வீட்டு ஸ்டவுக்கு
எரியத் தெரியும்
எரிக்கத் தெரியாது.
என் மகனுக்கொரு
பூரணமான வாழ்க்கை மட்டும்
நோக்கமாக இருந்ததால் தான்
மயிலே- உன்னை
மருமகளாக்கி இருக்கிறேன்.
மூலைக்கு மூலை
நடப்பது போல்
வியாபார நோக்கத்தோடு அல்ல.
இனி என்
இருபத்தோரு வயது குழந்தையின்
நித்திரையும்
விழிப்பும்
நீ
சம்மந்தப்பட்டது.
மகளே
என் வீட்டுக் கவுரவம்
உன் இதயத்திலும்
என் வீட்டுச் சாவி
உன் இடுப்பிலும்
இருக்க வேண்டுமென்பது தான்
இந்த
அன்னையின் உள்ளத்தின்
ஆடம்பரமில்லாத ஆசை.
வா- மகளே
வந்து உட்கார்
இது-
இது வரை
நான் வகித்து வந்த
தலைமை நாற்காலி
இனி மேல்-
எனக்கு
இரு்க்கவே இரு்க்கிறது
சாய்வு நாற்காலி...
புதன், 27 ஜனவரி, 2010
கவிஞர் வேங்கடகிருஷ்ணன்
கவிஞர் வேங்கடகிருஷ்ணன்
அவருக்கு சொந்த ஊரு மதுரை. 1990 லிருந்து பெரும் பொழுது நான் அவரோடு செலவிட்டிருக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் அறிஞர்கள் என அவர் அறியாதது எதுவுமில்லை. இலக்கியம் சார்ந்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை நான் கேள்விப் படும் முன் அவர் படித்திருப்பார். ஆன்மீகம், தியானம், நாத்திகம் எல்லாம் அவர் அறிந்தது. மகான்கள், ஞானிகள், மதங்கள் குறித்த விபரங்களை அவர் விரல் நுனிகள் வைத்திருக்கும்.
எப்பொருளில் கவிதை அல்லது கட்டுரை எழுதிக் கேட்டாலும். உடனே அதனை தயார் செய்து தரும் ஆற்றல் அவரிடம் நிரம்பிக் கிடக்கிறது.
அவரிடமிருந்து தமிழ், தமிழர்கள், ஆன்மீக மகான்கள் குறித்து ஏராளம் கற்றுக் கொண்டேன். நான் படித்த அதிக புத்தங்கள் அவர் மூலம் எனக்குக் கிடத்தவை. நானும் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குகிறேன் என்றால் அதற்கு அவர் காரணம். எனது முதல் வாசகர். நல்ல ரசிகர்.
அவருடன் நட்பு ஏற்பட்ட தொடக்க நாள்களின் அவர் எழுதிய கவிதைகளை எனது நோட்டுகளில் எழுதி வைத்து அழகு பார்ப்பேன். அப்படித்தான்... 1991 ம் வருடம் கல்கி வார இதழ் ஒரு கவிதைப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்ற அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. நான் எனது நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தேன். அந்த கவிதையைப் படித்துப் பாருங்கள்.
ஞான வெளியில்...
ஒரு தீப்பந்தம்
அதைச் சுழற்றினால்
அற்புத
தீச்சுடர் வளையம்.
எனது
யதார்த்த சொரூபம்
எனக்குத் தெரியாததால்
வாழ்க்கையைச்
சுழல விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்.
மூலத்தில்
முகிழ்ந்து எழுந்த
நானென்னும் ஆணவ
அலங்கோல பொம்மைக்கு
ஆன்ம தரிசனம்
எப்போது
மூல மொழியைப்
படிக்கத் தெரியாத
வேட்கையில்
மொழிப் பெயர்பைப்
படிக்கும் ஆனந்தம்.
உள்ளதை
உள்ளபடி உணரும்
திண்ணம் இல்லாததினால்
ஓடும் மனத்தின் மீது
உல்லாசப் பயணம்
அற்ப சுகம்.
பூமியின் பரப்பளவை விட
எனது
ஆசையின் பரப்பளவு
அதிகம் என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தால்
இரண்டடியில் அளந்து விட்டு
மூன்றாமடிக்கு
என்னை அளந்திருப்பான்.
நிறைவேறாத
ஆசைகள்
கனவாகச் சஞ்சரி்ககும்
கொஞ்சம்
கற்பனை இருக்குமெனில்
கவிதையாய் சஞ்சரி்க்கும்.
ஆன்மாவின்
நெடிய யாத்திரையில்
எண்ணிலாக் காட்சிகள்
இதய வானில்
இன்ப முகில்கள்
தாலாட்டும் போது
கால முட்களின்
கவலைக் கீறல்கள்
பள்ளி ஆசிரியர்
தேர்வுத் தாள் திருத்தும்
பணிக்கையாய் விழுகிறது.
தன்னைத் தானே
உணராததால்
தலை கால் தெரியாத
தத்துவக் குப்பைகள்
சேமிக்கப்படுகின்றன.
சிருஷ்டிக்குள்ளே நடக்கும்
சிலம்பாட்டத்தில் தான்
எத்தனை மகிழ்ச்சி.
வெற்றி
மனிதனை விழுங்குகிறது
தோல்வி
சிந்திக்க வைக்கிறது.
இரண்டையும்
கண்டு
நகைக்கத் தெரிந்தால்
ஞான வெளியில்
நாட்டியம் ஆடலாம்...
அவருக்கு சொந்த ஊரு மதுரை. 1990 லிருந்து பெரும் பொழுது நான் அவரோடு செலவிட்டிருக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் அறிஞர்கள் என அவர் அறியாதது எதுவுமில்லை. இலக்கியம் சார்ந்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை நான் கேள்விப் படும் முன் அவர் படித்திருப்பார். ஆன்மீகம், தியானம், நாத்திகம் எல்லாம் அவர் அறிந்தது. மகான்கள், ஞானிகள், மதங்கள் குறித்த விபரங்களை அவர் விரல் நுனிகள் வைத்திருக்கும்.
எப்பொருளில் கவிதை அல்லது கட்டுரை எழுதிக் கேட்டாலும். உடனே அதனை தயார் செய்து தரும் ஆற்றல் அவரிடம் நிரம்பிக் கிடக்கிறது.
அவரிடமிருந்து தமிழ், தமிழர்கள், ஆன்மீக மகான்கள் குறித்து ஏராளம் கற்றுக் கொண்டேன். நான் படித்த அதிக புத்தங்கள் அவர் மூலம் எனக்குக் கிடத்தவை. நானும் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குகிறேன் என்றால் அதற்கு அவர் காரணம். எனது முதல் வாசகர். நல்ல ரசிகர்.
அவருடன் நட்பு ஏற்பட்ட தொடக்க நாள்களின் அவர் எழுதிய கவிதைகளை எனது நோட்டுகளில் எழுதி வைத்து அழகு பார்ப்பேன். அப்படித்தான்... 1991 ம் வருடம் கல்கி வார இதழ் ஒரு கவிதைப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்ற அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. நான் எனது நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தேன். அந்த கவிதையைப் படித்துப் பாருங்கள்.
ஞான வெளியில்...
ஒரு தீப்பந்தம்
அதைச் சுழற்றினால்
அற்புத
தீச்சுடர் வளையம்.
எனது
யதார்த்த சொரூபம்
எனக்குத் தெரியாததால்
வாழ்க்கையைச்
சுழல விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்.
மூலத்தில்
முகிழ்ந்து எழுந்த
நானென்னும் ஆணவ
அலங்கோல பொம்மைக்கு
ஆன்ம தரிசனம்
எப்போது
மூல மொழியைப்
படிக்கத் தெரியாத
வேட்கையில்
மொழிப் பெயர்பைப்
படிக்கும் ஆனந்தம்.
உள்ளதை
உள்ளபடி உணரும்
திண்ணம் இல்லாததினால்
ஓடும் மனத்தின் மீது
உல்லாசப் பயணம்
அற்ப சுகம்.
பூமியின் பரப்பளவை விட
எனது
ஆசையின் பரப்பளவு
அதிகம் என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தால்
இரண்டடியில் அளந்து விட்டு
மூன்றாமடிக்கு
என்னை அளந்திருப்பான்.
நிறைவேறாத
ஆசைகள்
கனவாகச் சஞ்சரி்ககும்
கொஞ்சம்
கற்பனை இருக்குமெனில்
கவிதையாய் சஞ்சரி்க்கும்.
ஆன்மாவின்
நெடிய யாத்திரையில்
எண்ணிலாக் காட்சிகள்
இதய வானில்
இன்ப முகில்கள்
தாலாட்டும் போது
கால முட்களின்
கவலைக் கீறல்கள்
பள்ளி ஆசிரியர்
தேர்வுத் தாள் திருத்தும்
பணிக்கையாய் விழுகிறது.
தன்னைத் தானே
உணராததால்
தலை கால் தெரியாத
தத்துவக் குப்பைகள்
சேமிக்கப்படுகின்றன.
சிருஷ்டிக்குள்ளே நடக்கும்
சிலம்பாட்டத்தில் தான்
எத்தனை மகிழ்ச்சி.
வெற்றி
மனிதனை விழுங்குகிறது
தோல்வி
சிந்திக்க வைக்கிறது.
இரண்டையும்
கண்டு
நகைக்கத் தெரிந்தால்
ஞான வெளியில்
நாட்டியம் ஆடலாம்...
சனி, 23 ஜனவரி, 2010
கவிதைகள்
காதலனுக்கு ஒரு நினைவூட்டல்
அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும் அழியாமல் இருக்கலாம்.
நினைவிருக்கிறதா ?
ஒரு- இலையுதிர் காலத்திற்குப் பின்
அந்தக் காடுகளில்
தங்க நிறத்தில்
தளிரிலைகள்
துளிர்க்கத் துவங்கியபோது
நம் காதலும் துளிர்த்தது.
தளிரிலைக் காம்புகளி்ல்
சுரக்கும் தேனாய்
நம் காதலும் கனிந்தது.
அது ஒரு மார்ச் மாதம்
அப்போது அந்த மரங்கள்
பூக்களை சுமக்கத் துவங்கியது.
பூக்களின் வாசமும்
நம் காதலும்
ஊருக்குள் வீசத் தொடங்கியது.
ஒரு ஜூன் மாதத்தில்
வெடித்துச் சிதறும்-அதன்
காய்கள் போல்
நாம்-கலகலவென
பேசி சிரித்து மகிழ்ந்திருந்தோம்.
திருமணம்-குறித்து
நான் பேசிய போதெல்லாம்
நீ- அந்த மரத்தின்
பிசின் போல்
நாள்களை
இழுத்துக் கொண்டே போனாய்...
அப்புறம்
ஓர் நாள்-அது
அறுந்து விட்டது.
அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும்......
(ஹிவியா பிரசீலியன்ஸ்-ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர்)
அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும் அழியாமல் இருக்கலாம்.
நினைவிருக்கிறதா ?
ஒரு- இலையுதிர் காலத்திற்குப் பின்
அந்தக் காடுகளில்
தங்க நிறத்தில்
தளிரிலைகள்
துளிர்க்கத் துவங்கியபோது
நம் காதலும் துளிர்த்தது.
தளிரிலைக் காம்புகளி்ல்
சுரக்கும் தேனாய்
நம் காதலும் கனிந்தது.
அது ஒரு மார்ச் மாதம்
அப்போது அந்த மரங்கள்
பூக்களை சுமக்கத் துவங்கியது.
பூக்களின் வாசமும்
நம் காதலும்
ஊருக்குள் வீசத் தொடங்கியது.
ஒரு ஜூன் மாதத்தில்
வெடித்துச் சிதறும்-அதன்
காய்கள் போல்
நாம்-கலகலவென
பேசி சிரித்து மகிழ்ந்திருந்தோம்.
திருமணம்-குறித்து
நான் பேசிய போதெல்லாம்
நீ- அந்த மரத்தின்
பிசின் போல்
நாள்களை
இழுத்துக் கொண்டே போனாய்...
அப்புறம்
ஓர் நாள்-அது
அறுந்து விட்டது.
அந்த
ஹிவியா பிரசீலியன்ஸ்
மரக்காடுகளில்
நாம்-உட்கார்ந்து பேசிய
தடங்கள்
இப்போதும்......
(ஹிவியா பிரசீலியன்ஸ்-ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர்)
கவிதைகள்
கொஞ்சம் தண்ணீர்... நிறைய...
எப்போதாவது
வெடித்து வரும்
பால்ய கால எண்ணங்களில்
இதுவும் ஒன்றாகி விட்டது.
பள்ளிக்கூட விடுமுறையென்றால்
யுத்தம் கால்வாயோடு தான்-
கால்வாய் தீப்பிடித்துக் கொள்ளும்.
குண்டன் குமரேஷன்
குதிக்கும் போது
தெறி்க்கும் தண்ணீர்
வானம் தொடும்.
தவளை நீச்சலிடும்
பெற்றி்க் கோட் குமரிகளின்
முதுக்குப் புறங்களில்-
காற்றின் சில்மிஷத்தில்
பலூன்கள் பூக்கும்.
தொட்டு விளையாடுகையில்
துணி துவைக்கும்
மாமிகளின் இடையில் புகுந்து ஓடி
அறுப்புக் கேட்பது அலாதியானது.
டவுசருக்கு விடை கொடுத்து
ஆடும் 'அது'களோடு
வெட்டிப் போட்ட வாழை மரம்
சுமந்து வந்து
பயணம் போகும் பையன்களிடம்
மாலுமிக் கனவுகள்.
மான்களுக்கு
தூண்டில் போடும் வயதில்
மீன்களுக்கு
தூண்டில் போடும் வாலிபர்களின்
வால் பிடித்து நிற்கும்
சிறார் கூட்டம்.
இப்போதெல்லாம்
தொலைக்காட்சி்ப் பெட்டி வயர்களில்
சிக்கிக் கிடக்கிறார்கள்
சிறார்கள்.
கால்வாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கொஞ்சம் தண்ணீரும்
நிறைய சாக்கடையுமாய்....
எப்போதாவது
வெடித்து வரும்
பால்ய கால எண்ணங்களில்
இதுவும் ஒன்றாகி விட்டது.
பள்ளிக்கூட விடுமுறையென்றால்
யுத்தம் கால்வாயோடு தான்-
கால்வாய் தீப்பிடித்துக் கொள்ளும்.
குண்டன் குமரேஷன்
குதிக்கும் போது
தெறி்க்கும் தண்ணீர்
வானம் தொடும்.
தவளை நீச்சலிடும்
பெற்றி்க் கோட் குமரிகளின்
முதுக்குப் புறங்களில்-
காற்றின் சில்மிஷத்தில்
பலூன்கள் பூக்கும்.
தொட்டு விளையாடுகையில்
துணி துவைக்கும்
மாமிகளின் இடையில் புகுந்து ஓடி
அறுப்புக் கேட்பது அலாதியானது.
டவுசருக்கு விடை கொடுத்து
ஆடும் 'அது'களோடு
வெட்டிப் போட்ட வாழை மரம்
சுமந்து வந்து
பயணம் போகும் பையன்களிடம்
மாலுமிக் கனவுகள்.
மான்களுக்கு
தூண்டில் போடும் வயதில்
மீன்களுக்கு
தூண்டில் போடும் வாலிபர்களின்
வால் பிடித்து நிற்கும்
சிறார் கூட்டம்.
இப்போதெல்லாம்
தொலைக்காட்சி்ப் பெட்டி வயர்களில்
சிக்கிக் கிடக்கிறார்கள்
சிறார்கள்.
கால்வாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கொஞ்சம் தண்ணீரும்
நிறைய சாக்கடையுமாய்....
பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்
ஒரே வாரிசாக இரு
அதற்கு மேலென்றால்
மம்மியை சபி.
தாய் மொழி தவிர்.
செல்வச் செழிப்பிற்கு
டாடியை புகழ்.
பெண்ணென்றால்
முக்கால் நிர்வாணம் கொள்.
ஒரு முறையேனும்
கருக்கலை.
இணையை
வெளிநாட்டில் கொள்.
நேரமிருந்தால்
பிள்ளை பெறு.
ஊரிலுள்ள
மம்மிக்கும் டாடிக்கும்
முகம் காட்டாதே
பணம் காட்டு.
முடிந்தால்
ஹோமில் சேர்த்து விடு.
கடைசியில்
அனாதையாய் சாகவிடு.
ஒரே வாரிசாக இரு
அதற்கு மேலென்றால்
மம்மியை சபி.
தாய் மொழி தவிர்.
செல்வச் செழிப்பிற்கு
டாடியை புகழ்.
பெண்ணென்றால்
முக்கால் நிர்வாணம் கொள்.
ஒரு முறையேனும்
கருக்கலை.
இணையை
வெளிநாட்டில் கொள்.
நேரமிருந்தால்
பிள்ளை பெறு.
ஊரிலுள்ள
மம்மிக்கும் டாடிக்கும்
முகம் காட்டாதே
பணம் காட்டு.
முடிந்தால்
ஹோமில் சேர்த்து விடு.
கடைசியில்
அனாதையாய் சாகவிடு.
சனி, 16 ஜனவரி, 2010
குழந்தைகளை கிழிக்கும் புத்தகங்கள்
குழந்தைகளைக் கிழிக்கும் புத்தகங்கள்
- ஓ...
குழந்தைகளே..
அறிவீர்களா
எனது பள்ளி நாட்களை.. ? - இறுக்கிக் கட்டிய நிக்கரும்
ஊக்குக் குத்திய சட்டையுமாய்
அழகான நாட்கள் அவை. - மூலை உடைந்த சிலேட்டும்
அட்டைக் கிழிந்த தமிழ்ப் புத்தகமும்
அதிக பட்ச சுமைகள். - அ.. ஆ...
உயிர் எழுத்துக்கள் படித்து விட்டாலே
உலகம் படித்த சந்தோஷம். - நவரைப் பச்சிலைகள்
அழிப்பான்களாகும்.
மயில் பீலிகள்
புத்தக இடுக்குகளில்
குட்டி போடும். - மழை நாட்களில்
சிலேட்டு குடையாவதால்
டீச்சர் போட்ட நட்சத்திரம்
அம்மாவின் கண் படாமலேயே
அழிந்து போகும். - மாலைப் பொழுதுகள்
டயர் வண்டியோ
நொங்கு வண்டியோ
உருட்டுவதில்
ஓடிச் செல்லும். - ஓ...
குழந்தைகளே
அறிந்தீர்களா ...
எனது பள்ளி நாட்களை ..? - இப்போதெல்லாம்
எனது ஐன்ஸ்டீன் கனவுகள்
உங்கள் முதுகில் சுமத்தப்படுகிறது. - உங்களின் பொம்மைகளைப் பறித்து விட்டு
புத்தக் கட்டுகள் தந்து விட்டேன். - நீங்களும் தான்
சுமை சுமந்து
சோர்ந்து போயிருக்கிறீர்கள்.
காலையில் மாலையில் இரவினில்
ஓயாது உங்களை
புத்தகங்கள்
துரத்திக் கொண்டிரு்க்கின்றன. - புத்தகங்கள் கிழித்த
காயங்களுடனேயே தூங்கி விடுகிறீர்கள்
ஒவ்வொரு நாளும்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)