கவிஞர் வேங்கடகிருஷ்ணன்
அவருக்கு சொந்த ஊரு மதுரை. 1990 லிருந்து பெரும் பொழுது நான் அவரோடு செலவிட்டிருக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் அறிஞர்கள் என அவர் அறியாதது எதுவுமில்லை. இலக்கியம் சார்ந்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை நான் கேள்விப் படும் முன் அவர் படித்திருப்பார். ஆன்மீகம், தியானம், நாத்திகம் எல்லாம் அவர் அறிந்தது. மகான்கள், ஞானிகள், மதங்கள் குறித்த விபரங்களை அவர் விரல் நுனிகள் வைத்திருக்கும்.
எப்பொருளில் கவிதை அல்லது கட்டுரை எழுதிக் கேட்டாலும். உடனே அதனை தயார் செய்து தரும் ஆற்றல் அவரிடம் நிரம்பிக் கிடக்கிறது.
அவரிடமிருந்து தமிழ், தமிழர்கள், ஆன்மீக மகான்கள் குறித்து ஏராளம் கற்றுக் கொண்டேன். நான் படித்த அதிக புத்தங்கள் அவர் மூலம் எனக்குக் கிடத்தவை. நானும் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குகிறேன் என்றால் அதற்கு அவர் காரணம். எனது முதல் வாசகர். நல்ல ரசிகர்.
அவருடன் நட்பு ஏற்பட்ட தொடக்க நாள்களின் அவர் எழுதிய கவிதைகளை எனது நோட்டுகளில் எழுதி வைத்து அழகு பார்ப்பேன். அப்படித்தான்... 1991 ம் வருடம் கல்கி வார இதழ் ஒரு கவிதைப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்ற அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. நான் எனது நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தேன். அந்த கவிதையைப் படித்துப் பாருங்கள்.
ஞான வெளியில்...
ஒரு தீப்பந்தம்
அதைச் சுழற்றினால்
அற்புத
தீச்சுடர் வளையம்.
எனது
யதார்த்த சொரூபம்
எனக்குத் தெரியாததால்
வாழ்க்கையைச்
சுழல விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்.
மூலத்தில்
முகிழ்ந்து எழுந்த
நானென்னும் ஆணவ
அலங்கோல பொம்மைக்கு
ஆன்ம தரிசனம்
எப்போது
மூல மொழியைப்
படிக்கத் தெரியாத
வேட்கையில்
மொழிப் பெயர்பைப்
படிக்கும் ஆனந்தம்.
உள்ளதை
உள்ளபடி உணரும்
திண்ணம் இல்லாததினால்
ஓடும் மனத்தின் மீது
உல்லாசப் பயணம்
அற்ப சுகம்.
பூமியின் பரப்பளவை விட
எனது
ஆசையின் பரப்பளவு
அதிகம் என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தால்
இரண்டடியில் அளந்து விட்டு
மூன்றாமடிக்கு
என்னை அளந்திருப்பான்.
நிறைவேறாத
ஆசைகள்
கனவாகச் சஞ்சரி்ககும்
கொஞ்சம்
கற்பனை இருக்குமெனில்
கவிதையாய் சஞ்சரி்க்கும்.
ஆன்மாவின்
நெடிய யாத்திரையில்
எண்ணிலாக் காட்சிகள்
இதய வானில்
இன்ப முகில்கள்
தாலாட்டும் போது
கால முட்களின்
கவலைக் கீறல்கள்
பள்ளி ஆசிரியர்
தேர்வுத் தாள் திருத்தும்
பணிக்கையாய் விழுகிறது.
தன்னைத் தானே
உணராததால்
தலை கால் தெரியாத
தத்துவக் குப்பைகள்
சேமிக்கப்படுகின்றன.
சிருஷ்டிக்குள்ளே நடக்கும்
சிலம்பாட்டத்தில் தான்
எத்தனை மகிழ்ச்சி.
வெற்றி
மனிதனை விழுங்குகிறது
தோல்வி
சிந்திக்க வைக்கிறது.
இரண்டையும்
கண்டு
நகைக்கத் தெரிந்தால்
ஞான வெளியில்
நாட்டியம் ஆடலாம்...
அவருக்கு சொந்த ஊரு மதுரை. 1990 லிருந்து பெரும் பொழுது நான் அவரோடு செலவிட்டிருக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் அறிஞர்கள் என அவர் அறியாதது எதுவுமில்லை. இலக்கியம் சார்ந்து தமிழில் வெளிவந்த புத்தகங்களை நான் கேள்விப் படும் முன் அவர் படித்திருப்பார். ஆன்மீகம், தியானம், நாத்திகம் எல்லாம் அவர் அறிந்தது. மகான்கள், ஞானிகள், மதங்கள் குறித்த விபரங்களை அவர் விரல் நுனிகள் வைத்திருக்கும்.
எப்பொருளில் கவிதை அல்லது கட்டுரை எழுதிக் கேட்டாலும். உடனே அதனை தயார் செய்து தரும் ஆற்றல் அவரிடம் நிரம்பிக் கிடக்கிறது.
அவரிடமிருந்து தமிழ், தமிழர்கள், ஆன்மீக மகான்கள் குறித்து ஏராளம் கற்றுக் கொண்டேன். நான் படித்த அதிக புத்தங்கள் அவர் மூலம் எனக்குக் கிடத்தவை. நானும் படைப்பிலக்கியம் சார்ந்து இயங்குகிறேன் என்றால் அதற்கு அவர் காரணம். எனது முதல் வாசகர். நல்ல ரசிகர்.
அவருடன் நட்பு ஏற்பட்ட தொடக்க நாள்களின் அவர் எழுதிய கவிதைகளை எனது நோட்டுகளில் எழுதி வைத்து அழகு பார்ப்பேன். அப்படித்தான்... 1991 ம் வருடம் கல்கி வார இதழ் ஒரு கவிதைப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்ற அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. நான் எனது நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தேன். அந்த கவிதையைப் படித்துப் பாருங்கள்.
ஞான வெளியில்...
ஒரு தீப்பந்தம்
அதைச் சுழற்றினால்
அற்புத
தீச்சுடர் வளையம்.
எனது
யதார்த்த சொரூபம்
எனக்குத் தெரியாததால்
வாழ்க்கையைச்
சுழல விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்.
மூலத்தில்
முகிழ்ந்து எழுந்த
நானென்னும் ஆணவ
அலங்கோல பொம்மைக்கு
ஆன்ம தரிசனம்
எப்போது
மூல மொழியைப்
படிக்கத் தெரியாத
வேட்கையில்
மொழிப் பெயர்பைப்
படிக்கும் ஆனந்தம்.
உள்ளதை
உள்ளபடி உணரும்
திண்ணம் இல்லாததினால்
ஓடும் மனத்தின் மீது
உல்லாசப் பயணம்
அற்ப சுகம்.
பூமியின் பரப்பளவை விட
எனது
ஆசையின் பரப்பளவு
அதிகம் என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தால்
இரண்டடியில் அளந்து விட்டு
மூன்றாமடிக்கு
என்னை அளந்திருப்பான்.
நிறைவேறாத
ஆசைகள்
கனவாகச் சஞ்சரி்ககும்
கொஞ்சம்
கற்பனை இருக்குமெனில்
கவிதையாய் சஞ்சரி்க்கும்.
ஆன்மாவின்
நெடிய யாத்திரையில்
எண்ணிலாக் காட்சிகள்
இதய வானில்
இன்ப முகில்கள்
தாலாட்டும் போது
கால முட்களின்
கவலைக் கீறல்கள்
பள்ளி ஆசிரியர்
தேர்வுத் தாள் திருத்தும்
பணிக்கையாய் விழுகிறது.
தன்னைத் தானே
உணராததால்
தலை கால் தெரியாத
தத்துவக் குப்பைகள்
சேமிக்கப்படுகின்றன.
சிருஷ்டிக்குள்ளே நடக்கும்
சிலம்பாட்டத்தில் தான்
எத்தனை மகிழ்ச்சி.
வெற்றி
மனிதனை விழுங்குகிறது
தோல்வி
சிந்திக்க வைக்கிறது.
இரண்டையும்
கண்டு
நகைக்கத் தெரிந்தால்
ஞான வெளியில்
நாட்டியம் ஆடலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக