தன்னைத் தானே
வெட்டிக் கொண்டு
செத்துப் போனான் பா.கி.
கணினியிலிருந்து வெளியேறிய
கனலில்
கருகிப் போனார்கள்
தினக் கவர்ச்சிப் பத்திரிகை
ஊழியர்கள்
நாளை
நட்டு வைத்திருந்த
சூலாயுதத்தில் விழுந்து
செத்துப் போகக் கூடும்
ராம சங்கரன்
நீதி மன்றங்களுக்கு
சாட்சி முக்கியம்
மனசாட்சி ?
இனி
தீர்ப்புகளை
ரோபோக்கள் சொல்லும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக